Tuesday, April 13, 2010
விதையுதிற் சிறகு
புறாவின் இறக்கைகளைப்போன்று
எனக்கு
இரண்டு விதைகள்
இருந்தன
அத்தனை மிருது
அத்தனை இதம்
அத்தனைக் குளிர்ச்சி
இடைவெளியில்லா
இடைவெளியில்
முகம் புதைத்துச் சொன்னாள்
”விதைகளில் முகம் புதைப்பதென்பது உன்னதமானது”
முகம் விலக்கி
சொற்களைச் சேகரித்துக் கொண்டு
வந்த வழி மறைந்தாள்
விழிக்கையில்
காணக்கிடைத்தது
பால்கனியில்
ஓர் ஒற்றைச் சிறகு
Tuesday, February 16, 2010
குறி நிலம்
தொலைதூரத்தில்
வரைபடப் புள்ளிகளாய் தெரியும்
புகை மலை முகடுகளுக்குப் பின்னுள்ள
நிலத்தின் இதயத்திலிருந்து
கடல் துவங்குவதாகவும்
நிமிர்ந்த குறியின் சாயல்களில்
விரிந்திருக்கும் மணற்வெளியில்
நீர் சலித்த மோகினிகளும்
வனம் சலித்த நீலிகளும்
தழுவிக் கிடப்பதாகவும்
கிராமத்து யட்சியொன்று
அதன் பெரும் ஏக்கத்தை
என்னிடம் கடத்தியது
குறி நிலக் கிளர்வுகளோடு
ஏங்கிச் செத்த நிகழ் வேட்கையின்
கொடுங்கனவில்
இலுப்பை முனியின் நீள்முடியைக்
கைவசப்படுத்திய என் முப்பாட்டன் தோன்றி
அவ்வுன்னத நிலங்களில்
மலங்கழித்துத் திரிவதாய்
கெக்கலித்தான்
அவனையறியாமல் அவனின் விதைப் பையினுள்
தஞ்சம் புகுந்தேன்
காலத்தின் உறைந்த உதடுகளோடும்
புகையிலை வாசங்களோடும் பயணித்து
முடிவின்மையின் சாஸ்வதங்களை முத்தமிட்டபடி
விழுங்கக் காத்திருக்கும்
யோனி நிலத்தினுள் புதைந்து கொள்வேன்.
--
பவுத்திரம் :- http://www.ayyanaarv.com/2010/02/blog-post_16.html
Tuesday, February 27, 2007
இசையின் தனிமை
அடர் கானகத்தில் ஒரு புலி
அதைப் பார்த்து எனக்கு கிலி....
விஷ வடையால்
மண்டைய போட்டது ஒரு எலி
அய்யோ, காலை மிதிக்காதே!
ஒரே வலி!!
அண்ணா, கொஞ்சமா தொப்பை விழ தொடங்கி இருக்கு. கவனமா இருங்க
இதைவிட, இதுல ரொம்ப தெளிவா தெரியுறீங்க
அதைப் பார்த்து எனக்கு கிலி....
விஷ வடையால்
மண்டைய போட்டது ஒரு எலி
அய்யோ, காலை மிதிக்காதே!
ஒரே வலி!!
அண்ணா, கொஞ்சமா தொப்பை விழ தொடங்கி இருக்கு. கவனமா இருங்க
இதைவிட, இதுல ரொம்ப தெளிவா தெரியுறீங்க
Subscribe to:
Posts (Atom)