Tuesday, April 13, 2010
விதையுதிற் சிறகு
புறாவின் இறக்கைகளைப்போன்று
எனக்கு
இரண்டு விதைகள்
இருந்தன
அத்தனை மிருது
அத்தனை இதம்
அத்தனைக் குளிர்ச்சி
இடைவெளியில்லா
இடைவெளியில்
முகம் புதைத்துச் சொன்னாள்
”விதைகளில் முகம் புதைப்பதென்பது உன்னதமானது”
முகம் விலக்கி
சொற்களைச் சேகரித்துக் கொண்டு
வந்த வழி மறைந்தாள்
விழிக்கையில்
காணக்கிடைத்தது
பால்கனியில்
ஓர் ஒற்றைச் சிறகு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment